Friday 24 August 2018

பட்டம் பெற்ற மாணவர்கள்

எமது துறையில் 2015-17 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு 18-08-2018 (சனிக்கிழமை) அன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

15PMA வகுப்பில் பயின்ற 15 மாணவர்களும் தேர்ச்சி பெற்றதால் இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 100%. அனைவருமே பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு தங்கள் கடந்த கால கல்லூரி அனுபவங்களையும், தற்போது பணியாற்றிவரும் துறை பற்றியும் மிகுந்த சுவாரஸ்யத்துடன் பகிர்ந்துகொண்டனர்.



லொயோ கல்லூரியின் பெர்ட்ரம் பெருமண்டபத்தில் துறைத்தலைவர் முனைவர் லூ.சின்னப்பன் மாணவர்களின் பெயர்களை வாசிக்க கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை F. ஆண்ட்ரு சே.ச. அவர்கள் பட்டங்களை வழங்கினார்.

இந்த வகுப்பில் பயின்ற அருட்தந்தை சகாய ஜெரால்டு எபின் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கான பதக்கம் பெற்றார்.

இம்மாணவர்களின் பணியும் வாழ்க்கையும் சிறக்க துறை வாழ்த்துகிறது.

No comments:

Post a Comment