நோக்கம்


ஊடகங்கள் எண்ணற்று பெருகிவிட்ட இக்காலக்கட்டத்தில், அவ்வூடகங்களை சிறப்பாக நடத்திட ஊடக நெறிமுறைகளை நன்கு அறிந்த, திறமையான ஊடகவியலாளர்கள் தேவைப்படுகிறார்கள். தமிழ்ச் சமூகத்தை மேம்படுத்தும் உணர்வுடன் ஊடகங்களை முன்னடத்திச் செல்லும் ஊடகவியலாளர்களை உருவாக்குவதே இந்த பட்டப்படிப்பின் நோக்கம்.