Thursday 18 July 2019

ஊடக சாளரம் 3: மெர்சி மற்றும் வருண்

ஜுலை 18 அன்று கலைஞர் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மெர்சி மற்றும் இசையமைப்பாளர் வருண் ஆகியோர் முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களைச் சந்தித்து தங்களுடைய ஊடக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். 


சத்தியம் மற்றும் கலைஞர் செய்தி அலைவரிசைகளில் ஏழு வருட அனுபவம் பெற்ற மெர்சி சித்ரா, செய்தி சேகரிக்கும் முறை, தணிக்கை செய்வது, தொகுத்து வழங்குவது, நிறுவன அமைப்பு பற்றி விரிவாக விளக்கினார். ஒரு செய்தி வாசிப்பாளர் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள், கையாள வேண்டிய முறைகள், நடைமுறை சிக்கல்கள் ஆகியவற்றை விளக்கினார். செய்தி வாசிப்பில் ஆர்வமுள்ள மாணவர்களை படிக்க வைத்து செய்முறை பயிற்சியளித்தது பயனுள்ள நேரமாக அமைந்தது.


இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து பணியாற்றி அனுபவம் பெற்ற வருண், திரைப்படத் துறையில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை அம்சங்களை விளக்கினார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் கதை சொல்வதற்கான முன் தயாரிப்பு, தயாரிப்பு, மற்றும் பின் தயாரிப்பு உத்திகள் விளக்கப்பட்டது. திரைப்பட வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள், துறை சார்ந்து நிகழ்காலத்தில் சந்திக்கக்கூடிய சவால்கள், பிரச்சினைகள் முதலியவற்றை மாணவர்கள் தெரிந்துகொண்டனர்.

திரைப்படங்களில் 3D, Dolby Atmos, Cube, DTS போன்ற ஒலி சார்ந்த முறைகள், அவை கலவை செய்யப்படும் ஸ்டுடியோக்கள் பற்றி விளக்கப்பட்டது. இசையமைப்பாளர், Studio Sound Engineer, Recording Engineer, Mixing & Mastering போன்ற ஒலி சார்ந்த வேலை வாய்ப்புகள் பற்றி விளக்கப்பட்டது.