Thursday 17 December 2015

மாநில அளவிலான ஊடகப் போட்டிகள் - 2016

போட்டியாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க படைப்புகள் வந்து சேர்வதற்கான இறுதி நாள் பிப்ரவரி 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Wednesday 9 September 2015

வாரம் ஒரு ஊடக வல்லுநர் - சமீபத்திய விருந்தினர்கள்

ஊடகக் கலைகள் துறை 'வாரம் ஒரு ஊடக வல்லுநர்' என்ற தலைப்பில் ஊடகத் துறை சார்ந்த கலைஞர்களின் அனுபவப் பகிர்வு நிகழ்ச்சி நடத்திவருகிறது.

ஆகஸ்ட் 28: அன்று திரைத்துறையில் அடியெடுத்து வைத்திருக்கும் எமது முன்னாள் மாணவர் ஜெயச்சந்திர ஹாஷ்மி கலந்துகொண்டார்.  குறும்பட ஆக்கம் தொடர்பாக நடத்தப்பட்ட இந்த பகிர்வரங்கத்தில் சிறப்புரையாற்றிய ஹாஷ்மி, திரைப்படத்தில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் இன்றைய காலகட்டத்தில் அதிகம் இருக்கிறது என்றும் அதற்கான உத்திகள் சிலவற்றையும் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

இடமிருந்து வலம்: ஜெயச்சந்திர ஹாஷ்மி, தமிழ் ஸ்டுடியோ அருண், கவின் கவி. வாழ்த்துரை வழங்கும் துறைத்தலைவர்.


ஆகஸ்ட் 31: அன்று இந்தி திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் தமிழ் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் ஊடகக் கலைகள் துறை மாணவர்களைச் சந்தித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.



செப்டம்பர் 9, 2015 அன்று முன்னாள் மாணவரும் தற்போது தளிர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனம் நடத்திவரும் ஜெகநாதன் மாணவர்களைச் சந்தித்து உரையாற்றினார். தற்போது விஜய் அலைவரிசைக்காக தயாரித்துவரும் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி வரை மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தார்.

Saturday 22 August 2015

நிகழ்களம் - 2015

ஆகஸ்ட் 21, 2015 (வெள்ளி), சென்னை: 

பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கிடையேயான ஊடகப் போட்டிகளை ஊடகக் கலைகள் துறை ஏற்பாடு செய்திருந்தது. 'நிகழ்களம் 2015' என்கிற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகள்: பார்த்து பேசு, Selfie!, மற்றும் Ad-Zap. வெவ்வேறு துறைகளைச் சார்ந்த மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு பரிசுகளை வென்றனர்.


ஊடக ஆய்வியல் புலக் காட்சியரங்கத்தில் காலை 10 மணிக்கு 'பார்த்து பேசு' போட்டி தொடங்கியது. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.விக்னேஷ் கார்த்திக் விருந்தினராகப் பங்கேற்று போட்டியிட்ட மாணவர்களுக்கு உற்சாகமளித்தார். துறைத்தலைவர் லாரன்ஸ் ஜெயக்குமார் அவருக்கு நினைவு பரிசினை வழங்கினார்.


போட்டிகள் நிறைவு பெற்றதும், 'இன்று நேற்று நாளை' திரைப்படக் குழுவினருடன் நேர்காணல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரைப்படத்தின் இயக்குநர் R.ரவிக்குமார், படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால், மற்றும் கலை இயக்குநர் விஜய் ஆதிநாதன் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு வந்திருந்த மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைப் படக்குழுவினரிடம் கேட்டு தெளிவு பெற்றனர். காலை முதல் பிற்பகல் வரை நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கினர். திரைப்படக் குழுவின் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்து கொடுத்த முன்னாள் மாணவர் ஜெயச்சந்திர ஹாஷ்மி அவர்களுக்கு நன்றி.


போட்டி நடைபெற்ற வளாகத்தில்  ஊடகக் கலைகள் துறை மாணவர்கள் எடுத்த ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.


'நிகழ்களம் 2015' ஏற்பாடு செய்வதற்கு குறுகிய கால அவகாசமே கொடுக்கப்பட்டிருந்தாலும் போட்டிகளை நல்ல முறையில் நடத்திய ஊடகக் கலைகள் துறை மாணவர்களுக்குப் பாராட்டுக்கள்.

மேலும் படங்களுக்கு: சொடுக்கவும்.

Wednesday 19 August 2015

World Movie This Week

ஆகஸ்ட் 19, மாலை 4:30 மணிக்கு ஊடக ஆய்வியல் புலக் காட்சியரங்கத்தில் 'Life is Beautiful' (1997) திரைப்படம் திரையிடப்பட்டது.

Monday 20 July 2015

‘காக்கா முட்டை’ படக்குழுவினருக்கு லொயோலா கல்லூரி பாராட்டு!

For photos, click here.

சென்னை, ஜூலை 10:
சென்னை லொயோலா கல்லூரியில் முதுகலை ஊடகக் கலைகள் துறையின் பத்தாம் ஆண்டு தொடக்க விழா, தேசிய விருது பெற்றகாக்கா முட்டைபடக்குழுவினருக்கு விருது வழங்கும் விழா மற்றும் சிறப்பு பகிர்வரங்கம் ஜூலை 10 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் கல்லூரியில் உள்ள ஊடக ஆய்வியல் புலக் காட்சியரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில்காக்கா முட்டைஇயக்குநர் மணிகண்டன், கதையின் நாயகி நடிகை ஐஷ்வர்யா, பெரிய, சிறிய காக்கா முட்டைகள் ரமேஷ், விக்னேஷ் மற்றும் பாட்டி சாந்திமணி ஆகியோர் கலந்துகொண்டு பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர். தயாரிப்பாளர்கள் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் அவர்களின் சார்பாக இயக்குநர் மணிகண்டன் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.

பாராட்டுச் சான்றிதழ் வழங்கியவர்
பெற்றுக் கொண்டவர்
அருட்தந்தை ஜோசஃப் ஆண்டனிசாமி,
முதல்வர், லொயோலா கல்லூரி
இயக்குநர் மணிகண்டன்
பேரா. G. ராமமூர்த்தி,
இணை முதல்வர், லொயோலா கல்லூரி
தயாரிப்பாளர்கள் சார்பாக இயக்குநர் மணிகண்டன்
பேரா. ஹென்றி மரிய விக்டர்
முதல்வர், ஊடக ஆய்வியல் புலம்
பாட்டிசாந்திமணி
பேரா. சுரேஷ் பால்,
துறைத் தலைவர், காட்சித் தகவலியல் துறை
பெரிய காக்கா முட்டை
ரமேஷ்
பேரா. லாரன்ஸ் ஜெயக்குமார்,
துறைத் தலைவர், ஊடகக் கலைகள் துறை
சின்ன காக்கா முட்டை
விக்னேஷ்
பேரா.ஞானபாரதி,
ஊடகக் கலைகள் துறை
நடிகை ஐஷ்வர்யா

துறையின் பத்தாவது ஆண்டு விழா என்பதால் பத்து விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன.
கல்லூரி முதல்வரின் பிறந்த நாளும் ஜூலை பத்து என்பதால் அவருக்கும் இன்ப அதிர்ச்சியாக வாழ்த்து பாடல் பாடப்பட்டது.

முதுகலை ஊடகக் கலையில் இணைந்து படிக்க விரும்பும் மாணவர்கள் இப்படிப்பிற்காக விண்ணப்பிக்க இன்னும் கால அவகாசம் இருக்கிறது என்று வரவேற்புரையின் போது துறைத்தலைவர் லாரன்ஸ் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

துறையின் பத்து ஆண்டு கால பதிவுகளின் சுருக்கத்தை பேரா.சாம்சன் வாசித்தார்.

'காக்கா முட்டை' படக்குழுவினரை கௌரவிப்பதற்கான அவசியத்தை பேரா.முனைவர் ஞானபாரதி விளக்கினார்.

வாழ்த்துரை:
அருட்தந்தை ஜோசஃப் ஆண்டனிசாமி, முதல்வர், லொயோலா கல்லூரி வாழத்திப் பேசுகையில், “இது போன்ற சிறந்த சமூக சீர்திருத்த படைப்புகளை தரும் படைப்பாளிகளை வாழ்த்துகிறேன். நான் கீழே உட்கார்ந்திருக்கும்பொழுது, சிறிய காக்கா முட்டையுடன் பேசிக்கொண்டிருந்தேன். ‘நான் பள்ளிக்கூட பரீட்சையில் கூட ஐம்பது மார்க்கு தாண்டினதில்ல. விகடன் எங்களுக்கு அறுபது மார்க் கொடுத்திருக்காங்க!’ என்றது எனக்கும் வியப்பாகவே இருந்தது!” என்றார்.

பகிர்வு:
இயக்குநர் மணிகண்டன் பேசியதன் சுருக்கம் பின்வருமாறு:
ஊடகக் கல்வி பயில ஆர்வம் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் டிப்ளோமா மட்டுமே படிக்க முடிந்தது. 2002ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்து திரைப்படத் துறையில் நுழைய முயற்சிகள் எடுத்தேன். என்னுடைய கதைகளில் சூழலே வில்லனாக இருந்ததாலும், தனி கதாநாயகிகள் இல்லை என்பதாலும், கதை நன்றாக இருந்தாலும், அது வெகுஜனத்திற்கு எடுபடாது என்றுச் சொல்லி, கதையை மாற்றியமைக்க கேட்டுக்கொண்டனர். காதல் காட்சிகள் வேண்டும் என்று கேட்டனர். என்னுடைய கதைக்கு அது ஒவ்வாது என்று பதில் அளித்துவிட்டேன். மூன்றாவதாகச் சந்தித்த தயாரிப்பாளர்தான் வெற்றிமாறன். கதையில் எந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன், சமரசம் செய்யமாட்டேன் என்று கூறிய பின்னரே கதையை அவரிடம் விளக்கினேன். தயாரிப்பாளர்கள் இருவரும் திரைப்படத்தின் மீது கொண்ட காதல் காரணமாக விளைந்ததே இந்தப் படம். ஒரு திரைப்பட விழாவிலாவது இந்தப் படம் காட்சிப்படுத்தப்படுமென்றால் அது போதுமானது என்ற நிலையில் எடுக்கப்பட்டப் படம் இப்பொழுது ஒன்பது திரைப்பட விழாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ‘நதிக்குள் விழுந்த கோடரிகதையைப் போன்றதே என் கதையும். மூன்றாவது முறை எனக்கு பெயர், புகழ், பணம் எல்லாமே சேர்த்துக் கிடைத்துவிட்டது. படத்திற்கான பட்ஜெட் நீங்கள் நினைப்பதைவிட அதிகமாகவே இருந்தது.

என்னுடைய அடுத்தப் படத்திற்கான பணி நடந்துகொண்டிருக்கிறது. எத்தனைப் படங்கள் இயக்கினாலும் நான் சார்ந்திருக்கும் மதிப்பீடுகளில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளக் கூடாது என்பது எனது எண்ணம். ஊழல் நிறைந்த இந்தச் சமுதாயத்தில் எந்த ஊழலுக்கும் உட்படாது திரைப்படத் துறையில் சாதிக்க வேண்டும் என்பது எனது ஆவல்.

காக்கா முட்டை சிறுவர்கள் இருவரும் படத்தில் பேசிய வசனங்களைப் பேசி பார்வையாளர்களின் கரகோஷங்களை அள்ளினர்.
இறுதியாக, பேரா.ஆரோக்கியராஜ் நன்றியுரை வழங்க, தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

நிகழ்ச்சி நிரல்

இறை வணக்கம்

வரவேற்புரை
பேரா. எஸ். லாரன்ஸ் ஜெயக்குமார்,
துறைத்தலைவர், ஊடகக் கலைகள் துறை
பத்து விளக்கேற்றல்

துறையின் பத்தாண்டு பதிவுகள்
பேரா. சாம்சன் துரை,
ஊடகக் கலைகள் துறை
நிகழ்ச்சி அறிமுகம்
முனைவர் மா.ஞானபாரதி
ஊடகக் கலைகள் துறை
வாழ்த்துரை
முனைவர் அருட்தந்தை G. ஜோசஃப் ஆண்டனிசாமி சே..,
முதல்வர், லொயோலா கல்லூரி

பேரா. G. ராமமூர்த்தி,
இணை முதல்வர், லொயோலா கல்லூரி
விருதுகள் வழங்கல்

சிறப்பு பகிர்வரங்கம்
மணிகண்டன், இயக்குநர், காக்கா முட்டை
கலந்துரையாடல்
குழுவினருடன் கேள்வி-பதில் நேரம்
நன்றியுரை
பேரா.ஆரோக்கியராஜ்
நாட்டுப்பண்


LC-MAD-KMFA
Loyola College – Media Arts Department – Kaakkaa Muttai Film Appreciation Event

Wednesday 8 July 2015

Film Appreciation Function - காக்கா முட்டை

'காக்கா முட்டை' திரைப்படக் குழுவினரைப் பாராட்டுகிறோம்.

 நாள்: ஜூலை 10, 2015
நேரம்: பிற்பகல் 2:30 மணி
இடம்: ஊடக ஆய்வியல் புலக் காட்சியரங்கம், லொயோலா கல்லூரி

பாராட்டு விழாவிற்குப் பின் ஊடக ஆர்வலர்களுக்கென படக்குழுவினருடன் கலந்துரையாடலும் கேள்வி பதில் நேரமும் உண்டு.

அனுமதி: கல்லூரி மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மட்டும். வருகையை முன் பதிவு செய்துகொள்ளவும்.

The Post Graduate Department of Media Arts, Loyola College Chennai, is conducting a Film Appreciation program, for the film Kaakka Muttai - காக்கா முட்டை. Producer Vetrimaaran, Director Manikandan, Actress Aishwarya, Actress Santhimani (Grandmother), Child Actors Ramesh and Vignesh will receive the Certificate of Appreciation.