Saturday 22 August 2015

நிகழ்களம் - 2015

ஆகஸ்ட் 21, 2015 (வெள்ளி), சென்னை: 

பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கிடையேயான ஊடகப் போட்டிகளை ஊடகக் கலைகள் துறை ஏற்பாடு செய்திருந்தது. 'நிகழ்களம் 2015' என்கிற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகள்: பார்த்து பேசு, Selfie!, மற்றும் Ad-Zap. வெவ்வேறு துறைகளைச் சார்ந்த மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு பரிசுகளை வென்றனர்.


ஊடக ஆய்வியல் புலக் காட்சியரங்கத்தில் காலை 10 மணிக்கு 'பார்த்து பேசு' போட்டி தொடங்கியது. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.விக்னேஷ் கார்த்திக் விருந்தினராகப் பங்கேற்று போட்டியிட்ட மாணவர்களுக்கு உற்சாகமளித்தார். துறைத்தலைவர் லாரன்ஸ் ஜெயக்குமார் அவருக்கு நினைவு பரிசினை வழங்கினார்.


போட்டிகள் நிறைவு பெற்றதும், 'இன்று நேற்று நாளை' திரைப்படக் குழுவினருடன் நேர்காணல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரைப்படத்தின் இயக்குநர் R.ரவிக்குமார், படத்தொகுப்பாளர் லியோ ஜான் பால், மற்றும் கலை இயக்குநர் விஜய் ஆதிநாதன் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு வந்திருந்த மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைப் படக்குழுவினரிடம் கேட்டு தெளிவு பெற்றனர். காலை முதல் பிற்பகல் வரை நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கினர். திரைப்படக் குழுவின் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்து கொடுத்த முன்னாள் மாணவர் ஜெயச்சந்திர ஹாஷ்மி அவர்களுக்கு நன்றி.


போட்டி நடைபெற்ற வளாகத்தில்  ஊடகக் கலைகள் துறை மாணவர்கள் எடுத்த ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.


'நிகழ்களம் 2015' ஏற்பாடு செய்வதற்கு குறுகிய கால அவகாசமே கொடுக்கப்பட்டிருந்தாலும் போட்டிகளை நல்ல முறையில் நடத்திய ஊடகக் கலைகள் துறை மாணவர்களுக்குப் பாராட்டுக்கள்.

மேலும் படங்களுக்கு: சொடுக்கவும்.

No comments:

Post a Comment